வீட்டில் குழி தோண்டி இரவில் பூஜை.. புதையலா, நரபலியா? போலீஸ் விசாரணை!

pujai
pujai

அரக்கோணம் அருகே லாரி டிரைவர் வீட்டில் பூஜை நடத்தி பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதையல் எடுக்க ஏதேனும் நரபலி கொடுத்து பள்ளம் தோண்டினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த முசல்நாயுடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம்(51), லாரி டிரைவர். இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு கிழவனம் பகுதியில் உள்ளது. அந்த வீடு நீண்டநாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் ஆசீர்வாதம், சாமியார் ஒருவருடன் சேர்ந்து வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் திடீரென மணி சத்தம், மந்திரம் உச்சரிப்பது போன்றவை அக்கம் பக்கத்தினருக்கு கேட்டது. இதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த வீட்டிற்குள், புதையல் ஏதேனும் எடுக்க பள்ளம் தோண்டினார்களா? அல்லது நரபலி போன்ற செயல்களில் ஈடுபட பள்ளம் தோண்டினாரா? என சந்தேகித்தனர். உடனடியாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் ஒரு மூலையில் கலசங்கள் வைக்கப்பட்டு, வெற்றிலை, பூக்கள், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டதும், வீட்டின் நடுப்பகுதியில் சுமார் 2 அடி ஆழத்தில் வட்ட வடிவிலான பள்ளம் தோண்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

ஆனால் அங்கிருந்த சாமியாரை காணவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த லாரி டிரைவர் ஆசீர்வாதத்திடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரக்கோணம் அருகே ஆசீர்வாதத்தின் மருமகன் பாண்டியன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், இதனால் கணவரை இழந்து தனியாக வசிக்கும் மகள் சுலோச்சனாவை அழைத்து வந்து இந்த வீட்டில் குடியிருக்க வைக்க திட்டமிட்டாராம்.

ஆனால் வீடு நீண்ட நாட்களாக பூட்டி வைத்ததால் தீயசக்திகள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பூஜை நடத்தியதாக தெரிவித்தார். இருப்பினும் ஆசீர்வாதத்திடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories