கோயில் நகைகளை கபளீகரம் செய்யும் தமிழக அரசின் முயற்சி கண்டிக்கத் தக்கது: விஹெச்பி

alok kumar - 2026

கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யும் தமிழக அரசின் முயற்சி கண்டிக்கத் தக்கது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோரிக்கை விடுத்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக்குமார் சென்னையில் திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க இந்தியா முழுவதும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரினார்.

மேலும் அவர் கூறியதாவது… இந்தியாவில் கட்டாய மதமாற்றத்தின் மூலம் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க 11 மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றி உள்ளன.

இந்த தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, போலி வாக்குறுதிகள், பண முதலீடு, மிரட்டல் போன்றவற்றின் மூலம் மதமாற்றம் நடக்கிறது. மதமாற்றத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்துமத தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

தமிழக அரசு இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக்கி அதனை வங்கிகளில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கோவில் பணிகளுக்கு செலவிடும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு அளித்த நன்கொடை மத நம்பிக்கை சார்ந்தது. இது காலம் காலமாக நடந்து வரும் சம்பிரதாயம். இதில், அரசு தலையிட உரிமை இல்லை.

மாநில அரசு ஒருபோதும் இந்து கோவில்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது. கோவில் விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து கோவில்கள், மடங்களை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்து கோவில்களை அரசு விடுவிக்க நாடு தழுவிய முயற்சியை விஸ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் இந்து மத தலைவர்கள்,மடாதிபதிகளை சந்திக்க இருக்கிறோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories