செல்போனில் ஜார்ஜ் போட்டு மெத்தையில் வைத்த இளைஞர்! நேர்ந்த விபரீதம்!

Published:

sivaram
sivaram

18 வயதான சிவராம் என்ற நபர், கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை 57 வயதான மயில்சாமி, கூலி தொழில் செய்து வருகிறார்.

இவர் தனது மகன் சிவராமனை, கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி படிக்க வைத்துள்ளார். சிவராம் தற்போது முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், வழக்கம் போல் கடந்த 10ம் தேதி இரவு, இவர் கட்டில் மெத்தை மீது செல்போன் வைத்து சார்ஜ் செய்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, செல்போன் சார்ஜிங் ஒயரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மெத்தையில் தீ பிடித்துள்ளது.

தீ வேகமாக பரவியதை கவனிக்காமல் தூங்கிய சிவராம் உடையில் தீ பிடித்தது. வலி தாங்காமல் இவர் கதறிய போது பக்கத்து அறையில் தூங்கிய மயில்சாமி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிவராமை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில், சிவராம் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

செல்போன் வெடித்து அதன் மூலமாக படுக்கையில் தீ பரவியதாக தகவல் வெளியானது. ஆனால் வெடிக்கவில்லை. தீ பரவியதில் செல்போனும் எரிந்து நாசமாகி விட்டது.

செல்போன் சார்ஜர் ஒயர் பழுதாகி விட்டதை கவனிக்காமல் பஞ்சு மெத்தையில் நீண்ட நேரம் சார்ஜர் போட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img