சென்னை: சென்னையில் இன்று தனியார் டிவி., அலுவலக வாயிலில் மர்ம நபர்கள் 4 பேர் வீசிச் சென்றது பட்டாசு என்று போலீஸார் தங்கள் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், இன்று (12.3.2015) காலை 0300 மணியளவில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி வளாகம் அருகே 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் தொலைக்காட்சி அலுவலகம் உள்ளே பட்டாசுகளுடன் இருந்த 2 டிபன் பாக்ஸ்;களை பற்ற வைத்து வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக இத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சேதுநாராயணன் இன்று கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில். அடையார் துணை ஆணையர் கண்ணன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொலைக்காட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களின் உருவம் மற்றும் வாகனம் அடையாளம் காணப்பட்டது. அதனை கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி. கோயம்பேடு. தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கி வரும் மற்றும் இந்து இளைஞர் சேனா படையை நடத்தி வரும் ஜெயம் பாண்டியன் என்பவரின் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் என்பதும் தெரிய வந்தது. அதன்பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க விரைந்து சென்ற தனிப்படையினர் இன்று (12.3.15) இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1.வேணுகோபால் (29) 2.கே.மகாதேவன் (27). 3.முரளி(32). 4.சிவா (22). 5.சரவணன் (24). 6.ராஜா (25) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள்;.கோயம்பேட்டில், ஜெயம் பாண்டியன் நடத்தி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிருவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்கள் என்பதும். தினசரி ரு:.300-க்காக அவரது நிறுவனத்தில் பணிபுரிந்து அலுவலகத்திலேயே தங்கி வருவதும். முக்கிய குற்றவாளியான ஜெயம் பாண்டியனின் தூண்டுதலின் பேரில். ஜெயம்பாண்டியன் தயார் செய்து கொடுத்த பட்டாசுகளுடன் நீள்வட்ட டிபன் பாக்சில் எடுத்துக் கொண்டு. மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தொலைக்காட்சி நிறுவன வளாகத்தில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது. மேலும் கோயம்பேடில் உள்ள ஜெயம்பாண்டியனின் தனியார் பேருந்து நிறுவன அலுவலகத்திலிருந்து. மேற்படி சம்பவத்தில் ஈடுபடுத்திய இருசக்கர வாகனமும் பயன்படுத்தாத பட்டாசுகளும் கைப்பற்றப்பட்டன. முக்கிய குற்றவாளியான ஜெயம் பாண்டியன் இன்று (12.3.2015) மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும். இது குறித்து. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டி.வி. அலுவலக வாயிலில் வீசப்பட்டது பட்டாசு: போலீஸார் அறிக்கை
Popular Categories


