சென்னை: எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிகாலை புதிய தலைமுறையின் ஊடக அலுவலகம் டீபன்பாக்ஸ் வெடி குண்டினால் தாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா எந்தவித வன்முறையையும் ஊக்குவிப்பது கிடையாது. ஆக ஊடகத்தின் மீது நடந்த இந்த தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆனால், அதே சமயத்தில் எங்கே எந்த தாக்குதல் நடத்தினாலும் அதை பா. ஜ. க-வைச் சேர்ந்தவர்கள் மீதும் சங்க குடும்பங்கள் மீதும் பழி சுமத்துவதும், எதை எடுத்தாலும் உடனே அனைவரும் ஒரே நோக்கில் ஒரே இயக்கத்தையும். அதைச் சார்ந்த இயக்கங்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று தெரிவதற்கு முன்னாலே சில அமைப்புகளை குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல. அதுவும் ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். தமிழகத்தில் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாராபட்சம் நிலவுகிறது. சில மதங்கள், சில அமைப்புகள் சில போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் என்றால் அவர்களைத் தாஜா செய்வதும், அதனை கண்டிக்காமல் விடுவதும், மிதமாக இருப்பதும், ஆனால் அதே சமயத்தில் பண்பாடு ரீதியாக சில விமர்சனங்கள் வரும்போது அதை யார் எதிர்த்து கேட்டாலும் உடனே இந்து அமைப்புகள் மீது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதும் வருந்தக்கது. ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கும் உடனே கண்டனம் தெரிவிப்பதிலும,; யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்பும் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாரபட்சம் இருப்பதும் அதேபோல், சில பொய் குற்றங்கள் சுமத்தப்பட்டு சில அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்படும்போது, ஏன் கொலை செய்யப்படும்போது கூட கண்டனக் குரல்கள் எழுப்பபடுவதில்லை என்பது வேதனை. ஆக ஊடகங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

