எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதா: தமிழிசை

சென்னை: எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிகாலை புதிய தலைமுறையின் ஊடக அலுவலகம் டீபன்பாக்ஸ் வெடி குண்டினால் தாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா எந்தவித வன்முறையையும் ஊக்குவிப்பது கிடையாது. ஆக ஊடகத்தின் மீது நடந்த இந்த தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆனால், அதே சமயத்தில் எங்கே எந்த தாக்குதல் நடத்தினாலும் அதை பா. ஜ. க-வைச் சேர்ந்தவர்கள் மீதும் சங்க குடும்பங்கள் மீதும் பழி சுமத்துவதும், எதை எடுத்தாலும் உடனே அனைவரும் ஒரே நோக்கில் ஒரே இயக்கத்தையும். அதைச் சார்ந்த இயக்கங்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று தெரிவதற்கு முன்னாலே சில அமைப்புகளை குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல. அதுவும் ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். தமிழகத்தில் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாராபட்சம் நிலவுகிறது. சில மதங்கள், சில அமைப்புகள் சில போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் என்றால் அவர்களைத் தாஜா செய்வதும், அதனை கண்டிக்காமல் விடுவதும், மிதமாக இருப்பதும், ஆனால் அதே சமயத்தில் பண்பாடு ரீதியாக சில விமர்சனங்கள் வரும்போது அதை யார் எதிர்த்து கேட்டாலும் உடனே இந்து அமைப்புகள் மீது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதும் வருந்தக்கது. ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கும் உடனே கண்டனம் தெரிவிப்பதிலும,; யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்பும் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாரபட்சம் இருப்பதும் அதேபோல், சில பொய் குற்றங்கள் சுமத்தப்பட்டு சில அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்படும்போது, ஏன் கொலை செய்யப்படும்போது கூட கண்டனக் குரல்கள் எழுப்பபடுவதில்லை என்பது வேதனை. ஆக ஊடகங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories