டிவி அலுவலக குண்டு வீச்சு: அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Published:

சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலக வளாக குண்டுவெடிப்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (மார்ச் 12) காலை சுமார் 3 மணி அளவில் இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலக வளாகத்திற்குள் இரண்டு குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இது மூன்றாவது முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும். கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தையொட்டி ஒளிபரப்ப இருந்த நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக அலுவலகத்திற்கு வந்து ஒளிப்பதிவாளரை தாக்கியதோடு, கேமிராவை உடைத்தனர். ஒரு பெண் நிருபரையும், தலைமை செய்தியாளரையும் அந்த கும்பல் தாக்கியது. இதனுடைய தொடர்ச்சியாகவே, இன்று (12-03-2015) அதிகாலை புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தை குண்டு வீசி தாக்கியுள்ளனர். கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய நோக்கத்தோடு சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொலைக்காட்சி மீதும், தொலைக்காட்சியில் பணியாற்றுகிறவர்கள் மீதும் தொடுத்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img