தாளவாடி வனப்பகுதி சாலையில் ஒற்றை யானை உலாவுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 10 வனச்சரகங்கள் உள்ளன. அதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, கழுதைப்புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. சில நேரங்களில் சாலையோரம் முகாமிட்டும், வாகனங்களை துரத்தியும் வருவது உண்டு.
இந்தநிலையில், நேற்று மாலை தாளவாடி அருகே உள்ள சிக்கள்ளியில், சாலையை கடந்து ஒற்றை யானை சென்றது.
எனவே, வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என, தாளவாடி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.