தண்டவாளத்தில் திக் திக்.. வைரலான வீடியோ!

Attempted suicide - 2026

ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்.

சில அங்குல தூரத்தில் ஒரு நபர் மரணத்தில் இருந்து தப்பிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ரயில் அருகில் நெருங்கி வருவதை பார்த்த அந்த நபர், தண்டவாளத்தில் வந்து படுத்துக் கொண்டார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுனர் அவசரத்திலும் தனது விவேகமான செயலால், அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வீடியோ மும்பையில் உள்ள ஷிவ்டி ஸ்டேஷனில் இருந்து எடுக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் (CCTV Camera) பதிவாக காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரயில் பாதையில் ஒரு நபர் கவனக்குறைவாக நடந்து செல்வதில் இருந்து கிளிப் தொடங்குகிறது. ரயில் அந்த நபரை நெருங்கும்போது, ​​அந்த நபர் திடீரென தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அந்த நபர் தனது கழுத்தை தண்டவாளத்தின் மீது வைத்து, இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் படுத்துக் கொண்டார். ரயில் ஓட்டுனர் அவசரகால பிரேக்கை இழுத்ததால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

மேலும் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சில RPF பணியாளர்கள் அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி, அவரை அழைத்து வருகின்றனர். இந்த சம்பவம் காலை 11:45 மணியளவில் நடந்துள்ளது.

அந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம், “மோட்டார்மேன் செய்தது பாராட்டுக்குரிய பணி. மும்பையில் உள்ள செவ்ரி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் ஒரு நபர் கிடப்பதைப் பார்த்த மோட்டார்மேன், அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியதன் மூலம் அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார்.

உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறார்கள்” இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த வீடியோ (Viral Video) ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், சுமார் 900-க்கும் அதிகமானோர் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories