December 9, 2025, 8:03 PM
26.7 C
Chennai

ஒமிக்ரான்: ஒரே சோதனையில் கண்டறிய கருவி!

omicron - 2025

ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்றினை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளபடுகின்றன. முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு டேக்பாத் கருவி மூலம் தொற்று உருமாறியுள்ளதா? எனவும் மரபணு பகுப்பாய்வு மூலம் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து அதன் பிறகு மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி முழு விவரம் பெற்ற சுமார் 7 நாட்கள் வரை ஆகின்றன.

இதனால் விரைந்து பரிசோதனை முடிவுகளை பெற டாடா மருந்து நிறுவனம் TATA MD CHECK RT-PCR Omisure என்ற பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது.

இந்த புதிய கருவி ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றினை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றினை எளிதில் கண்டறியும் இந்த கருவி மூலம் குறிப்பிட்ட கால அளவில் அதிகளவில் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரவும் தன்மையை கட்டுபடுத்த முடியும் என்றும் சொல்லபடுகிறது.

அண்மையில் ஒமைக்ரான் குறித்து மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டமைப்பினால் தமிழக மரபணு பகுப்பாய்வு மையத்தை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முன்னதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூரு – இன்ஸ்டம், ஐதராபாத் – சி.டி.எப்.டி, மற்றும் புனே – என்.ஐ.வி. உள்ளிட்ட மரபணு பகுப்பாய்வகங்களுக்கே மாதிரிகள் அனுப்பப்படும் சூழல் இருந்தது.

இதில், முடிவுகள் வர தாமதம் ஏற்படுகிறது என்பதால் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையம் அனுமதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த கருவி பரிசோதனை முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்த பிறகே கொள்முதல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

Topics

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories