ஜேம்ஸ் வெப்: விண்ணில் நிலை நிறுத்தும் பணி வெற்றிகரம்: நாசா விஞ்ஞானிகள்!

Published:

James Webb - 2026

பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25ந்தேதி அன்று மாலை 5.50 மணியளவில் நாசாவின் உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கினர்.

இது, நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்தியை இந்த தொலைநோக்கி கொண்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடந்த இரு வாரமாக தொலைநோக்கியின் ஒவ்வொரு பாகமும் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முக்கிய நிகழ்வாக அதன் கண்ணாடிகள் விரிக்கப்பட்டு, சரியான முறையில் பெருத்தப்பட்டது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை துல்லியமாக படம் பிடிப்பதற்காக அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது.

Related articles

Recent articles

spot_img