ஆப்கான்: ஓடிச் சென்ற போது தொலைத்த குழந்தை… பெற்றோருடன் இணைந்தது!

baby1 - 2026

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த போது அந்நாட்டு மக்கள் பலரும் அமெரிக்காவுக்கு தப்பித்துச் செல்ல விமானங்களில் முண்டியடித்தனர். அப்போது தொலைந்த குழந்தை ஒன்று தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது அந்நாட்டு மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அமெரிக்க விமானங்களில் ஏறித் தப்பிக்க குடும்பங்களுடன் வந்தனர்.

baby 5 - 2026

கடைசியாகக் கிளம்பும் அமெரிக்க விமானங்களைப் பிடித்துவிடும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

பலரும் விமான இறக்கைகளில் உட்கார்ந்து எல்லாம் பயணித்து பார்க்கும் உலக மக்களின் நெஞ்சங்களைப் பதற வைத்தனர். அப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தப்பிக்க குடும்பம் ஒன்று விமான நிலையத்துக்கு வந்தது.

baby4 - 2026

அந்த குடும்பத்தின் தலைவர் அகமாதி தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் விமானத்தில் ஏற முயற்சித்தார்.

கூட்டம் அதிகமாக முண்டியடித்ததால் கைக்குழந்தை சொஹைல் அகமாதியை அங்கு நின்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரிடம் கொடுத்தார்.

baby 1 - 2026

5 அடியில் விமானத்துக்குள் ஏறிவிட்டு குழந்தையை வாங்கிக் கொள்ள நினைத்திருந்தார் அகமாதி. ஆனால், விமானத்துக்குள் ஏறிய பின்னரும் அமெரிக்கா சென்று இறங்கிய பின்னரும் குழந்தையை காணவில்லை.

காபூல் விமான நிலையத்திலேயே குழந்தை கைவிடப்பட்டு இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த ஆப்கான் டாக்ஸி டிரைவர் ஒருவர் குழந்தையை கண்டெடுத்து தனது குழந்தையாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.

baby3 - 2026

அந்த டாக்ஸி டிரைவர் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட அதன் மூலமாக அமெரிக்காவில் இருந்து தன் குழந்தையைக் கண்டுபிடித்துவிட்டார் அகமாதி.

ஆப்கனில் இருக்கும் தனது மாமனார் மூலம் தலிபான் போலீஸிடம் புகார் கொடுத்து குழந்தையை அதன் குடும்பத்தார் மீட்டுள்ளனர். விரைவில் அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோரிடம் குழந்தை சொஹைல் செல்ல உள்ளான்.

baby 2 - 2026

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/CSxVwbBgMZO/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories