ஆப்கான்: ஓடிச் சென்ற போது தொலைத்த குழந்தை… பெற்றோருடன் இணைந்தது!

baby1 - 2026

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த போது அந்நாட்டு மக்கள் பலரும் அமெரிக்காவுக்கு தப்பித்துச் செல்ல விமானங்களில் முண்டியடித்தனர். அப்போது தொலைந்த குழந்தை ஒன்று தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது அந்நாட்டு மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அமெரிக்க விமானங்களில் ஏறித் தப்பிக்க குடும்பங்களுடன் வந்தனர்.

baby 5 - 2026

கடைசியாகக் கிளம்பும் அமெரிக்க விமானங்களைப் பிடித்துவிடும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

பலரும் விமான இறக்கைகளில் உட்கார்ந்து எல்லாம் பயணித்து பார்க்கும் உலக மக்களின் நெஞ்சங்களைப் பதற வைத்தனர். அப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தப்பிக்க குடும்பம் ஒன்று விமான நிலையத்துக்கு வந்தது.

baby4 - 2026

அந்த குடும்பத்தின் தலைவர் அகமாதி தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் விமானத்தில் ஏற முயற்சித்தார்.

கூட்டம் அதிகமாக முண்டியடித்ததால் கைக்குழந்தை சொஹைல் அகமாதியை அங்கு நின்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரிடம் கொடுத்தார்.

baby 1 - 2026

5 அடியில் விமானத்துக்குள் ஏறிவிட்டு குழந்தையை வாங்கிக் கொள்ள நினைத்திருந்தார் அகமாதி. ஆனால், விமானத்துக்குள் ஏறிய பின்னரும் அமெரிக்கா சென்று இறங்கிய பின்னரும் குழந்தையை காணவில்லை.

காபூல் விமான நிலையத்திலேயே குழந்தை கைவிடப்பட்டு இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த ஆப்கான் டாக்ஸி டிரைவர் ஒருவர் குழந்தையை கண்டெடுத்து தனது குழந்தையாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.

baby3 - 2026

அந்த டாக்ஸி டிரைவர் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட அதன் மூலமாக அமெரிக்காவில் இருந்து தன் குழந்தையைக் கண்டுபிடித்துவிட்டார் அகமாதி.

ஆப்கனில் இருக்கும் தனது மாமனார் மூலம் தலிபான் போலீஸிடம் புகார் கொடுத்து குழந்தையை அதன் குடும்பத்தார் மீட்டுள்ளனர். விரைவில் அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோரிடம் குழந்தை சொஹைல் செல்ல உள்ளான்.

baby 2 - 2026

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/CSxVwbBgMZO/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Entertainment News

Popular Categories