December 5, 2025, 6:02 PM
26.7 C
Chennai

ஆப்கான்: ஓடிச் சென்ற போது தொலைத்த குழந்தை… பெற்றோருடன் இணைந்தது!

baby1 - 2025

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த போது அந்நாட்டு மக்கள் பலரும் அமெரிக்காவுக்கு தப்பித்துச் செல்ல விமானங்களில் முண்டியடித்தனர். அப்போது தொலைந்த குழந்தை ஒன்று தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது அந்நாட்டு மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அமெரிக்க விமானங்களில் ஏறித் தப்பிக்க குடும்பங்களுடன் வந்தனர்.

baby 5 - 2025

கடைசியாகக் கிளம்பும் அமெரிக்க விமானங்களைப் பிடித்துவிடும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

பலரும் விமான இறக்கைகளில் உட்கார்ந்து எல்லாம் பயணித்து பார்க்கும் உலக மக்களின் நெஞ்சங்களைப் பதற வைத்தனர். அப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தப்பிக்க குடும்பம் ஒன்று விமான நிலையத்துக்கு வந்தது.

baby4 - 2025

அந்த குடும்பத்தின் தலைவர் அகமாதி தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் விமானத்தில் ஏற முயற்சித்தார்.

கூட்டம் அதிகமாக முண்டியடித்ததால் கைக்குழந்தை சொஹைல் அகமாதியை அங்கு நின்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரிடம் கொடுத்தார்.

baby 1 - 2025

5 அடியில் விமானத்துக்குள் ஏறிவிட்டு குழந்தையை வாங்கிக் கொள்ள நினைத்திருந்தார் அகமாதி. ஆனால், விமானத்துக்குள் ஏறிய பின்னரும் அமெரிக்கா சென்று இறங்கிய பின்னரும் குழந்தையை காணவில்லை.

காபூல் விமான நிலையத்திலேயே குழந்தை கைவிடப்பட்டு இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த ஆப்கான் டாக்ஸி டிரைவர் ஒருவர் குழந்தையை கண்டெடுத்து தனது குழந்தையாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.

baby3 - 2025

அந்த டாக்ஸி டிரைவர் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட அதன் மூலமாக அமெரிக்காவில் இருந்து தன் குழந்தையைக் கண்டுபிடித்துவிட்டார் அகமாதி.

ஆப்கனில் இருக்கும் தனது மாமனார் மூலம் தலிபான் போலீஸிடம் புகார் கொடுத்து குழந்தையை அதன் குடும்பத்தார் மீட்டுள்ளனர். விரைவில் அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோரிடம் குழந்தை சொஹைல் செல்ல உள்ளான்.

baby 2 - 2025

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/CSxVwbBgMZO/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories