கிரிப்டோகரன்சி.. புதிய வைரஸுடன் ஹேக்கர்கள்! எச்சரிக்கை!

Hacker - 2026

சமீப காலங்களாக உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை குறி வைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சில புதிய கணினி வைரஸ்களை அவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறிவைக்கும் வகையில் புதிய வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் பிட்டிஃபெண்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ ‘BHUNT’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது சில கணினிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் ஒரே நோக்கம் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறி வைப்பது தான். இந்த வகை வைரஸ் பிட்காயின், எதிரியம்,அடோமிக், எக்ஸோடஸ் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வேலட்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது ப்ரேடட் மென்பொருள் மற்றும் டார்ன்ட்ஸ் பதிவிறக்கம் ஆகியவற்றின் மூலம் கணினிக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இது ஒருவரின் கணினிக்குள் வந்த பிறகு அவர்களுடைய கிரிப்டோ கரன்சி வேலட்டிலிருந்து மற்றொருவருக்கு வேகமாக கரன்சியை மாற்றும் திறன் கொண்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வேலட் தவிர இது கணினியில் உள்ள சில பாஸ்வேர்டு போன்ற சில தகவல்களையும் திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வைரஸை எளிதாக கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வைரஸ் ஒரு உண்மையான மென்பொருள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை சில வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் அறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் செய்து முடிக்கப்படாத பரிவர்த்தனைகள் வேலட்களில் ஸ்டோர் ஆகி இருக்கும். அதை நாம் நம்முடைய பிரைவேட் கீ மூலம் பயன்படுத்த முடியும்.

அந்த பிரைவேட் கீயை இந்த வைரஸ் கணினி மூலம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இந்திய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

முன்னதாக ஸ்பைடர்மேன் திரைப்படத்தை டாரன்ட் மூலம் பதிவிறக்கம் செய்த சிலரின் கணினியில் சில வைரஸும் சேர்ந்து பதிவிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் டாரன்ட் மூலம் புதிய வகையில் வைரஸ் ஒன்று கணினிக்குள் ஊடுறுவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories