ஆப்கானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஜம்மு காஷ்மீர், நொய்டாவிலும் எதிரொலி!

Published:

earth quake - 2026

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், நொய்டாவிலும் உணரப்பட்டது.

இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெஷாவர் நகரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் இருந்து தென்கிழக்கே 118 கிமீ தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது.. இதன் எதிரொலியாக இந்தியாவில், ஜம்மு காஷ்மீர், நொய்டா, தில்லி ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாக வில்லை..

ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் தில்லி வரை எதிரொலித்துள்ளதாக இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் இந்த நிலநடுக்கம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை..

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img