March 25, 2025, 3:25 PM
32.4 C
Chennai

கணவரைப் போல் நாட்டுக்கு சேவை! மறைந்த இராணுவ வீரரின் மனைவி இராணுவத்தில் தேர்ச்சி!

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.
இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த 20 வீரர்களில் ஒருவர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஃபராண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக் தீபக் சிங் கஹர்வார்.

எட்டு ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிவந்த இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளார். திருமண பந்தத்தின் ஆரம்பகட்டத்திலேயே சீனா வீரர்களின் அத்துமீறலால் உயிரை இழந்துள்ளார்.

கார் ரெஜிமென்ட்டின் 16-வது பட்டாலியனை சேர்ந்த இவரின் வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தீபக் சிங்கின் மனைவி ரேகா தேவி பெற்றுக்கொண்டார்.

ரேகா தேவி ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்தான் தற்போது ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார். இதற்கான ராணுவத் தகுதித் தேர்வான ஆளுமை மற்றும் நுண்ணறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ரேகா தேவி, சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகளுக்கான (ஓடிஏ) பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேரவுள்ளார்

23 வயதாகும் ரேகா தேவி அலகாபாத்தில் நடந்த SSB (Services Selection Board) நேர்காணலில் தேர்ச்சிபெற்ற பிறகே, அவர் பெயர் ராணுவப் பயிற்சி அகாடமியில் சேருவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தில் லெப்டினன்ட்களாக ரேகா தேவி நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்த அகாடமியில் ஒன்பது மாதங்கள் பயிற்சி பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் நாட்டுக்காக செய்த அதே சேவையை தானும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ரேகா தேவி ஆசிரியர் வேலையை துறந்துவிட்டு, இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

SSB நேர்காணலுக்குத் தகுதிபெற USPC ஆணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைத் தேர்வில் கலந்துகொள்வது அவசியம். ஆனால், நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

என்றாலும் வயது அதிகமாக இருந்தால் இதில் கலந்துகொள்ள முடியாது. ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ரேகா தேவிக்கு 23 வயதே ஆவதால் அவரால் ராணுவ பயிற்சி அகாடமியில் இணைய முடிந்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories