ஹிஜாப்: மத மோதலை உருவாக்கும் சமூக விரோத செயல் தடுக்கப்பட வேண்டும்!

hijab case1 - 2026

தமிழகத்தில் தலைதூக்குகிறது ஹிஜாப் – மத மோதலை உருவாக்க எண்ணும் சமூக விரோதிகளின் நடவடிக்கை தடுக்கப் படவேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்வியானது, அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்ற, குறிப்பாக வருங்கால இந்தியா என கருதப்படுகின்ற மாணவர்களை நல் வழிப்படுத்தும் ஒரு உன்னத வழிமுறையாகும்.

ஆனால் படிக்கும் மாணவிகள் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக, அடிப்படை இஸ்லாமிய மதவாத சக்திகள் தூண்டுதலால் தற்போது திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் தருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

இது பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை என்ற நோக்கத்தை சிதைப்பதாகும். மேலும் இதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய மாணவர்கள் யாரேனும் காவி துண்டு அணிந்து வரும் சூழல் வரலாம். இதனால் மத நல்லிணக்கம் சீர்கெட்டு, மாணவர் சமுதாயத்தில் தேவையற்ற மத பாகுபாட்டை இது உருவாக்கலாம்.

ஆகவே கல்லூரி, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க கூடாது என்பதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு முளையிலே இந்த விஷச்செடியை அழித்திட வேண்டும்.

இல்லையெனில் திமுக ஆட்சி வந்தாலே மதக் கலவரங்கள் உருவாகும் என சிறுபான்மை சமுதாயத்தினர் சிலர் தேர்தல் நேரங்களில் பேசியது உண்மைதான் என பொதுமக்கள் கருதக்கூடும்.

ஆகவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் விரைந்து அடிப்படையில் செயல்பட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்கள் வருவதை தடுத்திட வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories