ஹிஜாப்: மத மோதலை உருவாக்கும் சமூக விரோத செயல் தடுக்கப்பட வேண்டும்!

hijab case1 - 2026

தமிழகத்தில் தலைதூக்குகிறது ஹிஜாப் – மத மோதலை உருவாக்க எண்ணும் சமூக விரோதிகளின் நடவடிக்கை தடுக்கப் படவேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்வியானது, அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்ற, குறிப்பாக வருங்கால இந்தியா என கருதப்படுகின்ற மாணவர்களை நல் வழிப்படுத்தும் ஒரு உன்னத வழிமுறையாகும்.

ஆனால் படிக்கும் மாணவிகள் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக, அடிப்படை இஸ்லாமிய மதவாத சக்திகள் தூண்டுதலால் தற்போது திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் தருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

இது பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை என்ற நோக்கத்தை சிதைப்பதாகும். மேலும் இதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய மாணவர்கள் யாரேனும் காவி துண்டு அணிந்து வரும் சூழல் வரலாம். இதனால் மத நல்லிணக்கம் சீர்கெட்டு, மாணவர் சமுதாயத்தில் தேவையற்ற மத பாகுபாட்டை இது உருவாக்கலாம்.

ஆகவே கல்லூரி, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க கூடாது என்பதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு முளையிலே இந்த விஷச்செடியை அழித்திட வேண்டும்.

இல்லையெனில் திமுக ஆட்சி வந்தாலே மதக் கலவரங்கள் உருவாகும் என சிறுபான்மை சமுதாயத்தினர் சிலர் தேர்தல் நேரங்களில் பேசியது உண்மைதான் என பொதுமக்கள் கருதக்கூடும்.

ஆகவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் விரைந்து அடிப்படையில் செயல்பட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்கள் வருவதை தடுத்திட வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories