இனி சேஃப் தான்.. ட்விட்டர் அப்டேட்!

twitter - 2026

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ட்விட்டர் நிறுவனம், புதிதாக ‘Safety Mode’ எனும் அம்சத்தை, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகம் செய்து சோதனையை தொடங்கியது.

இந்த சேப்டி மோட் அம்சத்தை ஆக்டிவ் செய்து வைத்திருக்கும் பயனர்களின் கணக்குகளில் யாரேனும் தவறான கருத்தகளையோ, ஆபாச கமெண்டுகளையே பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த கணக்கு 7 நாள்களுக்கு தானாக ப்ளாக் ஆகிவிடும்.

பின்னர் 7 நாள்கள் கழித்து தானாக கணக்கு UnBlock செய்யப்பட்டுவிடும். தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை குறிப்பிட்ட நபர் பதிவிட்டு வந்தால், அவரது கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும்.

இந்த அம்சம் தான் 2021ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் அப்டேட் மூலம் வழங்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நேரத்தில் இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த அம்சத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 50% விழுக்காடு ட்விட்டர் கணக்குகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்பின் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் ‘Downward’ அம்சம்
தனிநபரைத் தாக்கி போடப்படும் பின்னூட்ட கருத்துகள், எதிர்மறை பின்னூட்ட கருத்துகள், எல்லாரும் தெரிந்து கொள்ளாதபடி தடுக்க, ட்விட்டர் ஒரு புதிய சேவையைத் தொடங்கி உள்ளது.

தேவையற்ற பின்னூட்ட கருத்துகளை ‘Downward’ அம்சத்தின் கீழ் தேர்வு செய்துவிட்டால், அந்தத் தகவல்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும், இந்தத் தேர்வு செய்யப்பட்ட பின்னூட்டகருத்துகள், பயனாளிக்கு மட்டும் தெரியும்.

வெப் ட்விட்டர் தளத்திற்கு மட்டும் வழங்கப்படும் இந்த சேவை, விரைவில் அனைத்து தகவல் சாதனங்களுக்கு விரிபடுத்தப்படும் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. தேவையற்ற கருத்துகளை முடக்க ட்விட்டர் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதேபோல், தற்போது 280 வார்த்தைகளாக உள்ள தகவல் பதிவின் அளவை, ‘Articles’ என்ற புதிய சேவையின் மூலம் விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயனர்களின் பல நாள் குறையாக இருந்த இந்த சேவை குறைபாட்டிற்கு ட்விட்டர் முற்றுபுள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சம் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories