புதிய கவுன்சிலர்கள் மார்ச்.2இல் பதவியேற்பு..

நகர்ப்புற உள்ளாட்சி‌ தேர்தலில்
வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் மார் 2ல் பதவி ஏற்கிறார்கள். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற 1,369 உறுப்பினர்களுக்கு அந்தந்த மாநகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். இதற்கான பதவி ஏற்பு விழா மார்ச் 2காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

வார்டு வாரியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மாநகராட்சி கமி‌ஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதே போல நகராட்சிகளில் வெற்றி பெற்ற 3,824 உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 7,408 உறுப்பினர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

புதிய உறுப்பினர்கள் மேயர் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக செய்து வருகின்றன.

மேயர், துணை மேயர் இருக்கைகள், உறுப்பினர்கள் இருக்கைகள், அவர்களின் அறைகள் போன்றவை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதுப்பொலிவுடன் உள்ளாட்சி அலுவலகங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டதும் அடுத்த கட்டமாக மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ல் நடைபெறுகிறது.

21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மேயர், துணை மேயர்களை தேர்வு செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழகத்திலேயே 200 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியாக சென்னை உள்ளது. 200 உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமன்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

15 மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்த உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கு நாளை மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories