கணக்கில் நாட்டமில்லை.. வணிகத்தில் வாரிய இளைஞர்!

Shyam - 2026

கோவையை சேர்ந்த ஷியாம் பிரசாத் ராஜசேகரன். சராசரியான சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ஷியாம், சுமாராக படிப்பவர்

10ம் வகுப்பில் கூட கணிதத்தில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பார்டரில் பாஸானதாக கூறுகின்றார். அதன் பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கியிருந்தாலும், வரவே வராது என்ற கணக்கு தான அதிகம் போட வேண்டியிருந்ததாகவும், அப்போது இது நமக்கான துறை இது இல்லை என புரிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

அம்மாவின் ஆதரவு என்பது மிகப்பெரியதாக இருந்தாலும், நிதி ரீதியாக சப்போர்ட் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை. எனினும் மனதில் உறுதியுடன் நண்பரின் உதவியுடன், பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் மக்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.

இவரின் முழு நேர பணியே இதுவாகத் தான் இருந்துள்ளது. அங்கு கிடைத்த சந்தோஷமும், உத்வேகமும் தான் தன்னை அடுத்த இடத்திற்கு செல்ல வழிவகுத்ததாகவும் கூறுகிறார்.

shayam 1 - 2026

தனக்கு கிடைக்காத கல்வியையே முதல் வணிகமாக ஆரம்பித்த ஷியாம், பற்பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பத்தில் ஒரு வணிகத்தினை தொடங்கி நன்றாக வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

ஆனால் ஒரு கட்டத்தில் பலர் இதனை இவரிடம் இருந்து கையகப்படுத்தி விட்டதாகவும், 2020ல் இருந்து வெளியே வந்துவிட்டார்.

தனக்கு எது வருமோ அதனை செய்யுங்கள் என கூறும் ஷியாம், அடுத்ததாக வெஜ் ரூட் என்ற நிறுவனத்தினை தொடங்கியுள்ளது. இது விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் ஒரு நிறுவனமாகும்.

இதன் மூலம் காய்கறி விற்பனை செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். ஆனால் நவீன முறையில் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம்.

இதன் மூலம் பிரெஷ் காய்கறிகள் எளிமையாக மக்களை சென்றடைய முடியும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி ஒரு வணிகத்தினை செய்து வரும் வெஜ் ரூட், தற்போது 6 நகரங்களில் வணிகம் செய்து வருகின்றது. இவர்களுக்கு தற்போது 70,000 வாடிக்கையாளர்களுக்கும் மேல் உள்ளனர்.

வெற்றி என்பது மிகப்பெரிய வீடு, கார் என்பது இல்லை, 4 பேர் நம்மால் சந்தோஷமாக இருந்தால் அது தான் வெற்றி என்கிறார் ஷியாம். எவ்வளவு சீக்கிரம் ஒரு வணிகத்தினை ஆரம்பிக்கிறீர்களோ? அவ்வளவு தோல்விகளும் வரும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

ஆனால் அது தான் வெற்றிக்கு அடிக்கலாக மாறும். ஆக நீங்கள் ஒரு விஷயத்தினை பற்றி நினைத்து நினைத்து பார்ப்பதை விட, அதனை செயல்படுத்துங்கள்.

ஆக எவ்வளவு விரைவில் தொழிலை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பியுங்கள். அப்படி ஆரம்பித்தால் பல தோல்விகள் வரும். அதனையே பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் தொழிலை வெற்றிகரமாக அமையும் என்கிறார்.

ஆரம்பத்தில் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் கவனம் செலுத்தி வரும் வெஜ் ரூட் நிறுவனம், தற்போது மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், ஹைத்ராபாத், நியூதில்லி, மும்பை, சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பாடுகளை செய்து வருகின்றது.

வெற்றிகரமான நடைபோட்டுக் கொண்டு இருக்கும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 1,25,000 டாலர்கள் முதலீட்டினையும் வணிக விரிவாக்கத்திற்காக திரட்டியது. ஆரம்பத்தில் சில நூறு ரூபாயில் ஆரம்பித்த நிலையில், இன்று 7 கோடி ரூபாய்க்கு மேலாக டர்ன் ஓவர் செய்யும் ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories