February 24, 2026, 5:21 AM
25 C
Chennai

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை தேவை!

tntj protest madurai - 2026

உயர்நீதிமன்ற , உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு முஸ்லிம்கள் கொலை மிரட்டல் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை என்று, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை…

கடந்த 17. 3 .2022 அன்று ஹிஜாப் சம்பந்தமாக மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நடந்த முஸ்லிம்களின் கண்டனப் பேரணியின் மேடையில் பேசிய மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா இந்த நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுக்கும் வகையில், நம் பாரத நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதோடு நில்லாமல், அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கொல்லப்பட்டால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முழு பொறுப்பு என்றும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் கொலை செய்வார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளான். அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் நீதிபதிகளையும் நீதித்துறையையும் மிரட்டும் வகையில் அமைந்திருந்தது.

அது மட்டுமன்றி சென்ற மாதம் நீதிபதியின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வந்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் என்றும் பேசியுள்ளான். (நீதிபதிகள் குடும்பத்தோடு வெளியே சென்றால் குடும்பத்தை தீர்த்து விடுவேன் என்று பொருள்படும் வகையில் பேசியுள்ளான்)

ஏதோ ஒரு முஸ்லிம் இளைஞன் இவ்வாறு பேசி விட்டான் எந்த எடுத்துக் கொள்ளலாம் என்றால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் அவனது கருத்தை ஆதரிக்கும் விதமாக கோஷம் இட்டது என்பது, இது அவனுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல, அங்கே இருந்த மொத்த முஸ்லிம்களின் கருத்தும் அதுவே என்பதை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட வீடியோக்கள் உறுதிப்படுத்துகிறது.

இந்திய திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளையே கொலை செய்வோம் என்று முஸ்லிம்கள் எச்சரிப்பதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட இத்தகைய மிரட்டலை முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த பெரியவர்களும், இயக்கங்களும் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்காதது அவர்களும் அதனை ஆதரிப்பது போல் அமைந்துள்ளது.

மேலும் நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய வழக்கறிஞர் பெருமக்கள்
குறிப்பாக தமிழக வழக்கறிஞர்கள் யாரும் கூட இது குறித்து கண்டனம்
தெரிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இத்தகைய பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் பின்புலம் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.


‘மோடியை கண்டும், யோகியை கண்டும், சாவை கண்டும் அமித் ஷாவை கண்டும் அஞ்சாத கூட்டம் இது. கூட்டம் இது. அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுகிற கூட்டம் இது. நிறுத்தி கொள். நிறுத்தி கொள். எங்கள் பொறுமை குணம் மாறும் முன் நிறுத்தி கொள். பொறுமையை நாங்கள் இழந்து விட்டால், நீ இருக்க மாட்டாய் புரிந்து கொள்’ என்றும் ‘உணர்ச்சி வசப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்தால், உச்சநீதி மன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்கு தீர்ப்பு கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு’ என்றும்

நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழக தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டும், பேசப்பட்டும் உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று நான் கோரியிருந்த நிலையில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் கொலை செய்வோம் என்று அந்த கூட்டத்தில் பேசப்பட்டும் தமிழக அரசும், தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத அடிப்படைவாத சக்திகள் வெளிப்படையாக பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்கை, அமைதியை, மதநல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. நீதிபதிகளை கொலை செய்து விடுவோம் என்று இந்த இயக்கம் வெளிப்படையாக கூறியிருப்பது மத அடிப்படைவாத சக்திகளின் கோரமுகத்தை தமிழகத்தில் இயங்குகின்றன என்பதை வெளிப்படையாக காட்டுவதோடு, இந்த இயக்கங்கள் நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையின்றி தீவிரவாத, பயங்கரவாத பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இப்போதே இந்த தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்காவிடில், விரைவில் பயங்கரவாதம் தமிழகத்தை மையம் கொள்ளும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை, அந்த கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாத பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிடுவதோடு, பயங்கரவாதத்தை பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும்.இல்லையேல், மதவாத, பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும்.

  • நாராயணன் திருப்பதி (பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories