மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா..ஏற்பாடுகள் தீவிரம்-

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், 15-ந் தேதி தேர் திருவிழாவும், நடக்கிறது. மேலும் 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று மாலை அழகர்கோவிலில் இருந்து அழகர் கள்ளழகர் வேடம் அணிந்து மதுரை நோக்கி வருகிறார். அதன்படி 15-ந் தேதி அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா 16-ந் தேதி நடக்கிறது. 17-ந் தேதி மதியம் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், இரவு தசாவதார நிகழ்ச்சிகளும், 19-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி கள்ளழகர் கோவிலை சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு, சுகாதாரப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மீனாட்சி கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் அனிதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மீனாட்சி கோவில் திருவிழாவில் வீதி உலா, அழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின் போது நடமாடும் வாகன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பது, கள்ளழகர் எழுந்தருளுவதற்காக வைகையாற்றில் நீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

images 2022 03 25T103439.267 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories