இன்ஸ்டாகிராம்: முழுசா அனுப்பிய புகைப்படம்.. பின்னர் கணவர் இல்லை எனத் தெரிந்து அதிர்ந்த பெண்!

photo - 2026

முகம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் பழகி பணத்தையும் இழக்கின்றனர். சமூக வலைதள மோசடிகளும் அதிகரித்திருக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் என நினைத்து இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் சாட் செய்து வந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்குப் பிறகே அது தன் கணவர் இல்லை என்று தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மும்பை தீன்தோஷி என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயது பெண் இன்ஸ்டாகிராமில் தன் கணவர் என்று நினைத்து ஒருவருடன் பழகிவந்தார்.

Instagram - 2026

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்துகொண்டனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணிடம் அவரின் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பும்படி இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் கேட்டுள்ளார்.

கணவர்தானே கேட்கிறார் என்று நினைத்து அந்தப் பெண்ணும் தனது அந்தரங்கப் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் அதிகமான அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண் அனுப்ப மறுத்தபோது தன்னிடம் இருக்கும் அந்தரங்கப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

உடனே அந்தப் பெண் தன் கணவரிடம் நேரடியாக இது குறித்துக் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதன் பிறகுதான் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசியது தன்னுடைய கணவர் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதி இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது அதே கட்டிடத்தில் வசிக்கும் 20 வயது இளைஞர் என்று தெரியவந்தது.

அந்த இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நவராத்திரி விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அதற்குப் பழிவாங்க அந்தப் பெண்ணின் கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு திறந்து, அவரிடம் சாட்டிங் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தப் பெண்ணின் புரொஃபைல் போட்டோவைத் திருடி, தனது புரொஃபைலில் வைத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணும் நம்பியுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories