வெளிநாட்டில் திருப்பதி கோவில் கட்ட 20 கோடி மதிப்புள்ள நிலம்! பக்தர் காணிக்கை!

Published:

Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நடந்தது

அப்பொழுது அங்கு வந்த சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கினார் சீசெல்ஸ் நாட்டில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில், “அந்த நாட்டில் கோவில் கட்டுவதற்கு தேவையான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும் அதன் பின்னர் கோவில் கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு கூடி முடிவு செய்யும்.

இதேபோல் அவர் தானமாக வழங்கியுள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது” என்றார். திருப்பதி கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர் ஒருவர் நிலத்தை தானமாக வழங்கியது இதுவே முதல் முறையாகும்

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img