ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படுவா கிராமம் அருகே கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,
கவுகாத்தி விரைவு வண்டியில் பயணித்த 5 பேர், சங்கிலியை பிடித்து இழுத்ததால் அந்த ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. புகை வந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விரைவு ரயிலை பயணிகள் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது
உடனே 5 பயணிகளும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியானதால் மொத்தம் 6பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.






