நடுரோட்டில் டெலிவரி பாயை செருப்பால் அடித்த பெண்!

Published:

chaper mar - 2026

தனது இருசக்கர வாகனத்தில் எடுத்த உணவு டெலிவரி செய்யும் பாயை நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அந்த பெண்ணின் இறுதி சக்கர வாகனத்தில் இடித்துள்ளார்.

இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்த உணவு டெலிவரி செய்யும் நபரை தனது செருப்பால் சரமாரியாக அடித்து காலால் எட்டி உதைத்தார்.

அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்தார்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பி பாகேல் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img