திருமணம் செய்வதாக கூறி 2 முறை கருக்கலைப்பு.. மதபோதகர் மீது இளம்பெண் புகார்!

mathapothakar - 2026

திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி கர்ப்பமாக்கினார். என மதபோதகர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற அந்தப் பெண் அளித்துள்ள புகார் மனுவில், ”நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன்.

நான் சில ஆண்டுகளுக்கு முன்னதாக காஞ்சிக்கோவில் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு சென்று வருவேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருபத்தி ஆறு வயது இளைஞருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

நல்ல பழக்கம் இருந்ததால் அவர் ஒருநாள் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அழைத்ததால் நான் அவருடன் சென்றேன். ஆனால் வீட்டிற்கு சென்றதும் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 2017ஆம் ஆண்டில் இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் .

இந்த விவரத்தை அவரிடம் சொன்னபோது நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் இப்போது அதற்கு சரியான நேரம் இல்லை. அதனால் இந்த கர்ப்பத்தை கலைத்து விடலாம் என்று என்னை சமாதானப்படுத்தி சேலத்திற்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார் .

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

அதன் பின்னர் சில மாதங்கள் கழிந்தன. மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால்தான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இப்போதும் இப்போது சரியான நேரம் அல்ல என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி சேலத்திற்கு அழைத்துச் சென்று என்னை மனைவி என்று டாக்டர்களிடம் அறிமுகப்படுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதற்கு அவரின் தந்தை உடந்தையாக இருந்தார்.

அதன் பின்னர் அவரிடம் சென்று திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர் வேதம் படித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று விட்டார். இப்போது அவர் மதபோதகராக திரும்பி வந்திருக்கிறார்.

அவரிடம் போய் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் இப்போது மதபோதகர். அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார் இதனால் அவர் மீதும் கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories