அதிர்ச்சி: தர்காவில் தோண்டிய பள்ளத்தில் ஹனுமான், சனிஸ்வரர் சிலைகள்!

Published:

hanuman statue - 2026

உத்திரபிரதேச மாநிலம் எட்டா பகுதியில் உள்ள ஒரு தர்காவில், அகழ்வாராய்ச்சி நடந்தது. அங்கே இந்து தெய்வங்களான ஹனுமான் மற்றும் சனிஸ்வரர் சிலைகள் மீட்கப்பட்டன.

ஜலேசர் பகுதியில் அமைந்துள்ள படே மியான் தர்கா வளாகத்தில் மூர்த்திகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் அந்த இடத்தில் சனிஸ்வரர் கோவில் இருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர், பின்னர் அது தர்காவாக மாற்றப்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தர்கா கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த வளாகத்தில் போலீஸ் சௌகி அமைப்பதற்காக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த மூர்த்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. விக்ரஹங்கள் சுத்தம் செய்யப்பட்டு, ஸ்ரீ சனிஸ்வரமூர்த்திக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 15அன்று தர்காவில் உள்ள படே மியான் சமாதியிலிருந்து 10 மீட்டர் தொலைவில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இடத்தில் தர்கா இல்லை என்றும், கோயில் இருந்த இடமாக இருந்ததாகவும் பாஜக எம்எல்ஏ திவாகர் அறிவித்தார். அதே வளாகத்தில் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்திய தொல்லியல் துறை குழு மாதிரிகளை சேகரிக்க அந்த இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக எம்.எல்.ஏ மற்றும் உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக அந்த இடத்தில் பகவான் சனிதேவ் கோவில் இருப்பதாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img