ரஷ்ய விஞ்ஞானிகள்    மருத்துவாழ் மலை அனுமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு…

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மருத்துவாழ் மலை உச்சிக்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் மருந்து வாழ் மலை அமைந்து உள்ளது. இந்த மலை சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த மலையை சுற்றி 16 கிலோ மீட்டர் கிரிவலப் பாதை அமைந்து உள்ளது. 
இந்த மலையின் உயரத்தை அந்தப்பகுதி மக்கள் ஒன்றாம் மடம், இரண்டாம் மடம், மூன்றாம் மடம் மற்றும் மொட்டை (உச்சி) என நான்கு பகுதிகளாக பிரித்து கூறுகின்றனர். இந்த நான்கு பகுதிகளிலும் ஒவ்வொரு கோவில் உள்ளது. 
பக்தர்கள் மலையில் நடந்து சென்று தங்களால் எந்த அளவிற்கு மலையின் உயரத்தை அடைய முடியுமோ அந்த அளவிற்கு நடந்து சென்று அங்கு இருக்கும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவது வழக்கம். அந்த அளவுக்கு ஆன்மீகம் நிறைந்த மலையாக இந்த மலை அமைந்து உள்ளது. மேலும் இந்த மலைப் பகுதி முழுவதும் அரிய வகையிலான மூலிகைகள் வளர்வதாக கூறப்படுகிறது. 
எனவே தற்போது இந்த மலை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இத்தனை சிறப்புகள் மிக்க மருந்துவாழ் மலைக்கு  தற்போது விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள்  அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மலையில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஞாயிற்று கிழமை அதிகாலையில் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஆன்மீக குழுவினர் ஒவ்வொரு வாரமும் மருத்துவாழ் மலையில் ஆன்மீக நடை பயணமாக உச்சிக்கு சென்று அங்குள்ள 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். 
அப்படி சென்ற பக்தர்களுடன்  கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மலை உச்சிக்கு சென்று உள்ளனர். அங்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அந்த மலையை பற்றிய சிறப்புகளை ஆன்மீக பக்தர்களிடம் கேட்டு வியந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories