சித்திரை மாத அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் மிக அதிகமாக வருகைதந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் அமைந்து உள்ள ராமநாதர் கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாட்களில் வழக்கத்தை விட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
இன்று சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசை திதியாகும். இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் அதிகளவில் வந்தனர்.
கடற்ரைக்கு வந்த பக்தர்கள் தங்கள் முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, கடலில் புனித நீராடி வந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





