நாற்காலிக்கு நட்டநடுவில் சண்டை.. ஜெயிக்கப் போவது யாரு.. கொஞ்சம் பாரு..!

Published:

Goat - 2026

உலகத்தில் நாற்காலிகளுக்காகத்தான் மனித குலம் தனக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகள் கடந்தும் நாற்காலி மீதான மோகம் மனிதர்களுக்கு இன்றுவரை போகவில்லை.

யார் அதிகார நாற்காலியில் அமர வேண்டுமென என்பதில் ஆரம்பிக்கும் போட்டி பல விபரீதங்களில் முடிந்திருக்கிறது.

இந்த குணம் மனிதர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. அனைத்து உயிர்களுக்குமே இருக்கும். எந்த விலங்கும் தன்னுடைய எல்லைக்குள் மற்ற விலங்கை வரவிடுவதில்லை.

இந்நிலையில் ஸ்டூல் ஒன்றுக்காக ஆட்டுக்குட்டிகள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் மலை மேல் ஆட்டுக்குட்டிகள் இருக்கின்றன. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஸ்டூல் ஒன்றில் ஏறி நிற்கிறது. அதை பார்த்த மற்ற ஆட்டுக்குட்டிகள் ஏற்கனவே நின்ற ஆட்டுக்குட்டியை தள்ளிவிட்டு ஏறி நிற்கின்றன. தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img