திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஜூன் 29-ந் தேதி துவக்கம்..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்
கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 29-ந் தேதி தொடங்குகிறது.
ஜூலை வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

1718486 thiruvattar adikesava perumal temple - 2026

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு 418 ஆண்டுகளுக்குப் பின்பு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்த கோவிலை புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. கோவில் கருவறை விமானம், கூரை மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபம் ஆகியன அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பளபளப்புடன் காட்சி அளிக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு வாஸ்து கலச ஹோமம், இரவு 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை, சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது. 30-ந் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம், மாலை 5 மணிக்கு எம்.பி.ஆதிராவின் ஆன்மிகச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் தியா நாயர் வழங்கும் பரதநாட்டியமும், வருகிற 1-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்கத்தா முகுல் முகர்ஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

2-ந் தேதி இரவு 7 மணிக்கு பிந்து லட்சுமி வழங்கும் கிருஷ்ணகதா நடனம், 3-ந் தேதி மாலை 5 மணிக்கு பவநேத்ரா குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி குழு சர்மிதா பிள்ளையின் பரதநாட்டியம், 4-ந் தேதி மாலை 5 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சாமி வழங்கும் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு காணிமடம் குழுவினர் வழங்கும் நர்த்தன ரம்மிய பஜனை, 5-ந்தேதி மாலை 5 மணிக்கு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா வழங்கும் அருளுரை, இரவு 7 மணிக்கு சென்னை ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறுகிறது.

6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம், 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வேத மந்திரம் முழங்க கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. 7 மணிக்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

8 மணிக்கு முளவிளை ஸாத்விகா சமாஜ இசை நாட்டிய அகாடமி சார்பில் “துவாபர யுகத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் பரதநாட்டியம் நடைபெறுகிறது. 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கர் வழங்கும் கும்பாபிஷேக மகிமை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி பஜனை ஆகியவை நடைபெறுகிறது. 7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் கோபிகா வர்மா வழங்கும் மோகினியாட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டலபூஜை, 9-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமர பிரதிஷ்டை, மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, கோவிலைச்சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் தீபமேற்றும் லட்ச தீப விழா, இரவு 7 மணிக்கு பரத நாட்டியம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அன்ன தானம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories