செங்கல்பட்டு அருகே பேருந்து லாரி மோதி விபத்து-ஐவர் பலி..

Published:

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அச்சரப்பாகம் அடுத்த தொழுப்பேடு அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் இருந்து பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMG 20220708 091821 992 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img