கேரளா-நீட் தேர்வெழுதிய மாணவிகளுக்கு நடந்த கொடுமை:

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டம் அயூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு தேர்வு மையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பெற்றோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் கொல்லம் ஊரக காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய அரசிடம் இது தொடர்பான விவகாரம் கொண்டுச் செல்லப்படும் என்று கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து விளக்கம் அளித்துள்ளார்.

dharmendra pradhan main 1 - 2026
கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து

ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையிடம் இது குறித்து கேட்டதற்கு, இதுவரை அது தொடர்பான புகார்கள் எதுவும் வரப்படவில்லை என்று பதிலளித்துள்ளது. இது தொடர்பாக தேர்வு முடிந்ததும் தேசிய தேர்வு முகமையிடம் மாணவிகள் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக மின்னஞ்சல் மூலமாகக் கூட எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து கொல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்த போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தேர்வு மையத்தில் தேர்வெழுத வந்த சுமார் 90 மாணவிகள், தங்களது உள்ளாடைகளில் இருந்த உலோக கொக்கிகள் காரணமாக, வெடிகுண்டு சோதனைக் கருவிகளில் சப்தம் எழுந்ததால், இந்த அவலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கொல்லம் ஊரக காவல்துறையினர், மாணவிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், நாங்கள் 12 மணிக்கு தேர்வு மையத்தில் எங்கள் பெண்ணை இறக்கிவிட்டோம். சிறிது நேரத்தில் துப்பட்டாவைக் கொண்டுவருமாறு கூறினார்கள். நாங்களும் கொண்டு போய் கொடுத்தோம். தேர்வு முடிந்து, எங்களது மகள் வெளியே வரும்போதுதான் என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரிந்தது.

அவரது உள்ளாடையில் இருந்த இரும்புக் கொக்கியால், அவர் நுழைவுவாயிலில் செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அந்த உள்ளாடையை அகற்றினால்தான் உள்ளே நுழைய அனுமதிப்போம் என்று தேர்வு அறை அதிகாரிகள் கூறிவிட்டதாகவும், அந்த தேர்வு நடந்த கல்லூரி நிர்வாகத்துக்குக் கூட இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை மட்டும் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று, உள்ளாடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலும், மிக மோசமான அனுபவமும் ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலிலேயே அவர்கள் தேர்வெழுதிவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் மற்றொரு பெற்றோர்.இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தேர்வு நடைபெற்ற கல்லூரி தரப்பில் கேட்கப்பட்டபோது, தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள்தான் தேர்வை நடத்துகிறார்கள். மாணவர்களை சோதிப்பதும் அவர்கள்தான். எங்களது ஊழியர்களுக்கு இங்கே எந்த வேலையும் கிடையாது. நீட் தேர்வின்போது தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் மட்டுமே அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

harassment image - 2026
Representational image.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories