சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

images 86 - 2026

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சிபிஎஸ் பிளஸ் 2 தேர்வில் 98.86% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும்,98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் 2ம் இடத்திலும், 97.79% தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் 3ம் இடம் பிடித்துள்ளது.

Tamil News large 3082728 - 2026
IMG 20220722 113905 275 - 2026

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முடிவுக்காக காத்து இருந்தனர். ஆனால் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஆனது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் கல்லூரியில் சேருவதில் சிரமம் ஏற்பட்டது. பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததால் தங்களுக்கு இடங்கள் கிடைக்குமா? என்ற பதட்டத்தில் இருந்தனர். ஆனால் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் வரையில் மாணவர் சேர்க்கையை முடிக்கக்கூடாது என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.25 சதவீதமும், மாணவிகள் 93 சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முடிவுகளை இணையதளத்திலும், பள்ளியிலும் நேரில் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென வெளியானதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் உற்சாகம் அடைந்தனர். கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஆன்லைன் வழியாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தனர். தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் கல்வியில் சேருவதற்கான அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-ந்தேதி வரை பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. `உயர்கல்வியில் சேர முடியாத நிலைமையை எடுத்துக் கூறியதை தொடர்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பிளஸ்-2 முடிவை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முடிவுகளில்சென்னை மண்டலம் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 92.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர்.சிபிஎஸ்இ +2 தேர்வை 14,35,366 மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், 13,30,662 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்‌

சிபிஎஸ் பிளஸ் 2 தேர்வில் 98.86% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும்,98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் 2ம் இடத்திலும், 97.79% தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் 3ம் இடம் பிடித்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories