ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்படவில்லை-மத்திய அரசு

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்ததற்கு மத்திய அரசு இன்று உரிய விளக்கம் கூறியுள்ளது.

இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்கள் இணைந்து மாநிலங்களவையின் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில் அவர்கள், திங்கள்கிழமை மதிப்புக்குரிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அவரது பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்கவில்லை. ஒரு மூத்த தலைவருக்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்ததற்கு எங்கள் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தற்போது விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் தரவரிசை மற்றும் முன்னுரிமை அட்டவணைப்படி உள்துறை அமைச்சகம் இருக்கைகளை ஒதுக்கியது. இதில் 7-வது நிலையில் வரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு 3-வது வரிசையில்தான் இருக்கை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் முன் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது’ என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நான் மூலையில் இருப்பதை கவனித்த ஒரு ஊழியர், அவரை (கார்கே) நடுப்பகுதிக்கு மாறி அமருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதை அவர் மறுத்து விட்டார். இது எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

790847 malli - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories