ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்படவில்லை-மத்திய அரசு

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்ததற்கு மத்திய அரசு இன்று உரிய விளக்கம் கூறியுள்ளது.

இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்கள் இணைந்து மாநிலங்களவையின் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில் அவர்கள், திங்கள்கிழமை மதிப்புக்குரிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அவரது பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்கவில்லை. ஒரு மூத்த தலைவருக்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்ததற்கு எங்கள் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தற்போது விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் தரவரிசை மற்றும் முன்னுரிமை அட்டவணைப்படி உள்துறை அமைச்சகம் இருக்கைகளை ஒதுக்கியது. இதில் 7-வது நிலையில் வரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு 3-வது வரிசையில்தான் இருக்கை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் முன் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது’ என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நான் மூலையில் இருப்பதை கவனித்த ஒரு ஊழியர், அவரை (கார்கே) நடுப்பகுதிக்கு மாறி அமருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதை அவர் மறுத்து விட்டார். இது எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

790847 malli - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories