சங்கரன்கோவிலில் மாமன்னர் பூலித்தேவரின் 255வது ஜோதித் திருநாள் குருபூஜை!

sankarankoil pulithevar gurupooja1 - 2026

நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவரின் 255 வது ஜோதித் திருநாள் குருபூஜை சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநயினார் கோயிலில் உள்ள பூலித்தேவரின் அறையில் அனுசரிக்கப்பட்டது. பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளையின் சார்பில் துரை சூரியபாண்டியன் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டாஞ்செவல் பகுதியை ஆட்சிசெய்த மாமன்னர் பூலித்தேவர், ஆங்கிலேய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக 1750களில் முதல் குரல் கொடுத்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி – நவாப் கூட்டுப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றவர். நெற்கட்டாஞ்செவல் பகுதியைச் சுற்றியுள்ள பாளையக்காரர்கள் ஜமீன்களைச் சேர்த்துக் கொண்டு, கூட்டுப் படையினை அமைத்தவர். 

1767இல் தலைவன் கோட்டையில் தங்கியிருந்த போது, துரோகியரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, பிரிட்டிஷாரால் சங்கிலியிட்டுக் கொண்டு வந்த போது,  சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லி ஆலயத்துக்குள் வந்த பூலித்தேவர் இங்கே இறைவனுடன் ஜோதியில் ஐக்கியம் ஆனதாக வரலாறு.  இதை நினைவுறுத்தும் வகையில் சங்கரன்கோவில் சிவன் அம்பாள் சந்நிதிக்கு நடுவே பூலித்தேவர் அறை உள்ளது. அதில் அவரது திரு உருவப்படமும் இடம்பெற்றுள்ளது. இங்கே சிறப்பு பூஜைகளும் அவரது குருபூஜை தினங்களில் நடைபெறுகின்றன. 

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!
sankarankoil pulithevar gurupooja - 2026

1767இல் இறைவனுடன் ஜோதியில் ஐக்கியமான பூலித்தேவரின் 255 ஆவது ஜோதித் திருநாள் குருபூஜை ஆடி மாதம் 10ஆம் நாள் (ஜூலை 26) அன்று அனுசரிக்கப் பட்டது. 

பூலித்தேவரின் ஆத்மார்த்த குருவான ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக ஸ்வாமி ஜீவசமாதியில் இருந்து மரியாதைகள் செய்யப்பட்டு, அவரது அருளாசி பெறப்பட்ட மாலை, ஜமீன் சார்பில் வாரிசுதாரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்கரன்கோயில் ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயிலில் உள்ள மாமன்னர் பூலித்தேவரின் அறையில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories