சங்கரன்கோவிலில் மாமன்னர் பூலித்தேவரின் 255வது ஜோதித் திருநாள் குருபூஜை!

sankarankoil pulithevar gurupooja1 - 2026

நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவரின் 255 வது ஜோதித் திருநாள் குருபூஜை சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநயினார் கோயிலில் உள்ள பூலித்தேவரின் அறையில் அனுசரிக்கப்பட்டது. பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளையின் சார்பில் துரை சூரியபாண்டியன் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டாஞ்செவல் பகுதியை ஆட்சிசெய்த மாமன்னர் பூலித்தேவர், ஆங்கிலேய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக 1750களில் முதல் குரல் கொடுத்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி – நவாப் கூட்டுப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றவர். நெற்கட்டாஞ்செவல் பகுதியைச் சுற்றியுள்ள பாளையக்காரர்கள் ஜமீன்களைச் சேர்த்துக் கொண்டு, கூட்டுப் படையினை அமைத்தவர். 

1767இல் தலைவன் கோட்டையில் தங்கியிருந்த போது, துரோகியரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, பிரிட்டிஷாரால் சங்கிலியிட்டுக் கொண்டு வந்த போது,  சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லி ஆலயத்துக்குள் வந்த பூலித்தேவர் இங்கே இறைவனுடன் ஜோதியில் ஐக்கியம் ஆனதாக வரலாறு.  இதை நினைவுறுத்தும் வகையில் சங்கரன்கோவில் சிவன் அம்பாள் சந்நிதிக்கு நடுவே பூலித்தேவர் அறை உள்ளது. அதில் அவரது திரு உருவப்படமும் இடம்பெற்றுள்ளது. இங்கே சிறப்பு பூஜைகளும் அவரது குருபூஜை தினங்களில் நடைபெறுகின்றன. 

sankarankoil pulithevar gurupooja - 2026

1767இல் இறைவனுடன் ஜோதியில் ஐக்கியமான பூலித்தேவரின் 255 ஆவது ஜோதித் திருநாள் குருபூஜை ஆடி மாதம் 10ஆம் நாள் (ஜூலை 26) அன்று அனுசரிக்கப் பட்டது. 

பூலித்தேவரின் ஆத்மார்த்த குருவான ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக ஸ்வாமி ஜீவசமாதியில் இருந்து மரியாதைகள் செய்யப்பட்டு, அவரது அருளாசி பெறப்பட்ட மாலை, ஜமீன் சார்பில் வாரிசுதாரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்கரன்கோயில் ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயிலில் உள்ள மாமன்னர் பூலித்தேவரின் அறையில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories