சிவகாசி- “2023” புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயார் நிலையில் ..

IMG 20220803 WA0173 - 2026

‘2023’ம் புத்தாண்டுக்கான தினசரி, மாதக் காலண்டர்கள் மற்றும் டைரிகளுக்கான புதிய ஆல்பங்கள் தயாராகியுள்ளன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மிகவும் தரம் மற்றும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும், சிவகாசியில் தயாராகும் காலண்டர்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

தினசரி, காலையில் அனேகம்பேர் கண்விழிப்பது காலண்டர்களின் முன்பு தான். முடிந்த நாளை கிழித்து, கசக்கி எறிந்துவிட்டு, புதிய நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பது தான் வழக்கம்.
காலண்டர்களில் கிழிக்கப்படும் அந்த தாளில் பல அறிஞர்கள், ஞானிகள், ஜோதிட வல்லுனர்கள், காலண்டர் வடிவமைப்பாளர்கள், மற்றும் பல தொழிலாளர்களின் உழைப்பு இருப்பது பலருக்கு தெரியாது.

சிவகாசியில் 50க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ‘2023’ம் புத்தாண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக வரும் புத்தாண்டில் வெளியிடப்படும் காலண்டர்களின் மாதிரிகள் அடங்கிய ஆல்பங்கள் தயாரிக்கப்படும். கடந்த 3 மாதங்களாக, புதிய காலண்டர்களுக்கான ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வந்தது. தற்போது புத்தாண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பங்கள் முழுமையாக தயாராகியுள்ளது. புதிய ஆல்பங்கள் ஆகஸ்ட் 3ம் தேதி (ஆடி 18ம் தேதி) புதன் கிழமை, ஆடிப்பெருக்கு நாளில் வெளியிடப்படுகிறது. காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்களில், புதிய காலண்டர் ஆல்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நிறைவு பெற்றவுடன், காலண்டர் நிறுவனங்களின் முகவர்களுக்கு ஆல்பங்கள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களிடம், புத்தாண்டுக்கான காலண்டர் மாதிரிகளை காண்பித்து முகவர்கள் ஆர்டர்கள் எடுத்து, காலண்டர் நிறுவனங்களுக்கு அனுப்புவார்கள். அதன் பின்பு ஆர்டர்களுக்கு ஏற்ப காலண்டர்கள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

“2023” புத்தாண்டை வரவேற்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ரகங்களில் காலண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மதங்களின் சுவாமி படங்கள், புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், பிரசித்திபெற்ற ஸ்தலங்கள், இயற்கை காட்சிகள், நாட்டின் முக்கிய மற்றும் பிரபலமான இடங்கள், சுற்றுலா தலங்கள், பிரபல நடிகர்கள் என காலண்டர்களை அலங்கரிக்கும் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான காலண்டர் ரகங்களுடன், புதிய வடிவமைப்பில் டை கட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், கோல்டன் பாயில்ஸ், சில்வர் பாயில்ஸ், ஜெயிண்ட், முப்பரிமாணம் (3 டி) காலண்டர், பெட் பாயில்ஸ், கோல்டன் பாயில்ஸ் போட்டோ பிரேம் காலண்டர் என பல ரகங்களில் காலண்டர்கள் தயாராகியுள்ளன. மேலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் சில்ட்ரன்ஸ் மினி காலண்டர்கள் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் ஆங்கிலம் எழுத்துகள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் அதற்கான படங்களுடன் வண்ணமயமாக தயாராகியுள்ளது.

காலண்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கற்பகா காலண்டர் நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் கூறும்போது, ஆடிப்பெருக்கு நல்ல நாளில் 2023ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான காலண்டர்களுடன், இந்த ஆண்டும் புதிய ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலண்டர் தயாரிக்கும் பேப்பரின் விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. அட்டை, காலண்டர் தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது மின் கட்டணமும் அதிகரித்துள்ளது. மேலும் அச்சகங்களில் பயன்படுத்தப்படும் வண்ண மையின் ஜி.எஸ்.டி. வரியும் 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. காலண்டர் தயாரிப்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்கள், மின் கட்டணம், ஜி.எஸ்.டி.வரி உயர்வு என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு காலண்டர்களின் விலையும் 35 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதம் உயரும் வாய்ப்புள்ளது. விலை உயர்வு தவிர்க்க முடியாதது. ஆனாலும் எங்கள் நிறுவனத்தின் காலண்டர்களின் தரம், வாடிக்கையாளர்களை மிகவும் திருப்தி படுத்துவதாக இருப்பதால், வழக்கமான அளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
IMG 20220803 WA0177 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories