வெங்கையா நாயுடு கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் செயல்பட்டார்-பிரதமர் மோடி

ராஜ்யசபாவில் இன்று நடந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் நாயுடு சிறப்பாக செயல்பட்டதாக’ பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக.,10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நடைபெற்ற துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மேற்குவங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆக.,11ல் பதவியேற்க உள்ளார்.

நாளை மறுநாளுடன் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது அப்போது அங்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவராக, எம்பியாக, மத்திய அமைச்சராக, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு செயல்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி நிறையில் அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். மாநிலங்களவைக்கு இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் ஆகும்.

மாநிலங்களவையின் பல வரலாற்றுத் தருணங்கள் வெங்கையா நாயுடுவின் அழகான செயல்பாடுகளும் தொடர்புடையவை ஆகும். வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். துணை ஜானாதிபதி வெங்கையா நாயுடு மிகவும் புத்திசாலித்தனமாக பேசக் கூடியவர். அனைத்து மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை. இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது. எல்லா திட்டங்களையும் மேம்படுத்துவதற்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியவர் வெங்கையா.

கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளை சிறப்பாக கையாண்டவர் வெங்கையா. எந்த தருணத்திலும் சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் திறன் படைத்தவர் வெங்கையா இவ்வாறு பாராட்டு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் எங்களின் கொள்கையில் நமக்குள் வேறுபாடுகள் இருந்துள்ளது. இதனால் உங்களுக்கு நாங்கள் சில மனக்கஷடத்தை கொடுத்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் அவையை சிறப்பாக கொண்டு செல்வதில் கவனமாக இருந்தவர். உங்களுக்கு நன்றி .உங்களின் பணி என்றும் போற்றுதலுக்குரியது. 3 முறை எம்பி.யாக இருந்து செம்மையனா பணிகள் ஆற்றிய போது உங்களுடன் இருந்துள்ளோம் என்ற பெருமையும் உண்டு. கர்நாடகா, ஐ தராபாத் தொடர்பான 371 ஜே நிறைவேற்ற துணையாக இருந்தமைக்கு நன்றி. என அவர் பேசினார்.

Tamil News large 3095242 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories