சியாச்சின் பனிமலையில் தேசிய கொடி ஏற்றிய இந்திய ராணுவ வீரர்கள்..

Published:

824308 whwfs - 2026

உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ. நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும்.

அதிக குளிரால் சமையல் செய்வதும் கடினம் வாய்ந்தது. சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் சக்தி குறைதல் ஆகியவை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். சியாச்சினில் இந்திய அரசு ஒவ்வொரு நாளும் ரூ.6 கோடி வரை செலவிடுகிறது. ஆண்டுக்கு ரூ.2190 கோடி செலவிடுகிறது. சியாச்சினில், குறைந்த ஈரப்பதம், தீவிர குளிர், புற ஊதா கதிர்வீச்சு ஆகியவை காணப்படுகிறது. வீரர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடும் சூழ்நிலை காணப்படுகிறது. தூய குடிநீர் கிடைப்பதும் சிரமம். தற்காலிக கூடாரங்களில், எதிரிகளின் தாக்குதலை எப்போதும் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இவ்வளவு உயரத்தில் இருந்தபோதும், கடும் குளிரிலும் பாகிஸ்தான் படை வீரர்களை எதிர்கொள்ள தயாராக உள்ள சூழலில், உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை இன்று ஏற்றியுள்ளனர். அதற்கு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். அதன்பின்னர் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதை வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img