விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக்கடை அமைப்பதற்கு அனுமதி-

images 85 - 2026

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக்கடை அமைப்பதற்கு அனுமதி‌என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்காக 6109 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5783 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 326 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதையும் படியுங்கள்: 17-ந் தேதி எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தரை தளத்தில் மட்டுமே பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. மேலும் அந்த அறை 25 சதுர மீட்டருக்கும் அதிகமான சுற்றளவில் இருக்கக்கூடாது. இதையும் படியுங்கள்: திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளை விற்பனை செய்யக்கூடாது.

இங்கு புகை பிடிக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்கவிடக்கூடாது. உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்த பட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். தணிக்கை செய்வதற்காக அதிகாரிகள் வரும்போது பட்டாசு கடையின் உரிமத்தை அவர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இதுபோல மொத்தம் 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1773108 fireworkshops - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories