தேவர் பற்றி பொய் பரப்பும் முரசொலிக்கு ஆர்எஸ்எஸ்., கண்டனம்!

Published:

guruji and thevar - 2026

சென்னை : ‘ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்து பகிர்வதும், ஆர்எஸ்எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என, ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்… 

திமுக.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழ், ‘வாட்ஸ் ஆப்’பில் வந்தது எனக் கூறி, ‘நம் உயிர் உள்ளவரை, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்., நுழையக் கூடாது’ என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக, ஒரு ‘மீம்ஸ்’ நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த தகவல் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான தகவல் என்பது மட்டுமின்றி, முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்தவரை, ஆர்எஸ்எஸ்., உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், ‘தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ என்றார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், ஆர்எஸ்எஸ்., அமைப்பை எதிர்த்தார் எனக் கூறி, மக்கள் இடையே ஆர்எஸ்எஸ்., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த, திமுக.,வும் அதன் நாளிதழும் முயற்சிப்பது வெட்கக்கேடானது.

ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வதும், ஆர்எஸ்எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது… என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மை என்ன?!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்

தியாக பூமி, 8-3-1956, (பக்.7-8)

WhatsApp Image 2022 10 15 at 10.21.40 AM - 2026
WhatsApp Image 2022 10 15 at 10.21.52 AM - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img