
சென்னை : ‘ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்து பகிர்வதும், ஆர்எஸ்எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என, ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
திமுக.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழ், ‘வாட்ஸ் ஆப்’பில் வந்தது எனக் கூறி, ‘நம் உயிர் உள்ளவரை, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்., நுழையக் கூடாது’ என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக, ஒரு ‘மீம்ஸ்’ நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த தகவல் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான தகவல் என்பது மட்டுமின்றி, முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்தவரை, ஆர்எஸ்எஸ்., உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.
ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், ‘தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ என்றார்.
உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், ஆர்எஸ்எஸ்., அமைப்பை எதிர்த்தார் எனக் கூறி, மக்கள் இடையே ஆர்எஸ்எஸ்., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த, திமுக.,வும் அதன் நாளிதழும் முயற்சிப்பது வெட்கக்கேடானது.
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வதும், ஆர்எஸ்எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது… என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மை என்ன?!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்
தியாக பூமி, 8-3-1956, (பக்.7-8)

