உ.பி-அரசுப்பள்ளியில் விலையுயர்ந்த மதுபானங்கள்..

933244 liq - 2026

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் விலையுயர்ந்த மதுபானங்கள் அடங்கிய ஏராளமான அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட‌ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகரில் உள்ள தமுக்கி ராஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியின் சமையல் அறையில் மதுபானங்கள் அடங்கிய 52 மதுபான பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த போது, அந்த அறைக்கு சென்றபோது, ​​அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்களும் அங்கு வந்தனர்.இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதுபாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பகுதி பீகார் எல்லையை ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியிலேயே மது கடத்தல்காரர்கள் மதுபாட்டில்களை வைத்திருந்து கடத்தினரா என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளியில் சில கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அந்த அறை பொருட்களை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது, அதன் சாவி கிராம தலைவரிடம் வைக்கப்பட்டுள்ளது என்றார். மறுபுறம், அரசுப் பள்ளியில் மதுபானம் பதுக்கி இருப்பது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் குமார் சிங் கூறுகையில், பள்ளியில் இருந்து 51 மதுபானப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலால் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பீகாரில் மதுவிலக்குக்குப் பிறகு, ஆம்புலன்ஸ்களிலும், சில சமயங்களில் மருந்துகளுக்கு நடுவிலும் மறைத்து வைத்து மது கடத்தல்காரர்கள் உ.பி.யில் இருந்து பீகாருக்கு மதுபானங்களை கடத்துகின்றனர். முதலில் உ.பி.-பீகார் எல்லையில் இருப்பு வைத்து, அதன் பின், சந்தர்ப்பம் பார்த்து, பீகாருக்குள் மதுபானம் கடத்தப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories