தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது- ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்..

IMG 20221126 WA0083 - 2026

சென்னை தாம்பரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி ரூ.1.50 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்‌செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம் சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் ‘புளு ஸ்டோன்’ என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. அப்பகுதியில் பிரபலமான இந்த நகைக்கடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த நகைக்கடையில் பணிகளை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை பொறுப்பாளரான ஜெகதீசன் என்பவரின் செல்போனில் அலாரம் ஒலித்தது. நகைக் கடைக்குள் யாரோ புகுந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளுஸ்டோன் நகை கடையில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. நகைக் கடையில் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மர்ம நபர்கள் நகைக்கடை மாடிக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து லிப்ட் இணைப்பு அறை வழியாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க- வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் அணிந்துருந்த டி சர்ட்டை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இதில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் வைத்து போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். நகைக்கடையில் கொள்ளை அடித்தபின் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகைக்கடை மாடியில் குதித்து தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 2 சிறார்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

affdba21577da7bb8f4c0a739167df251669435372517109 original - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories