விருதுநகர் 4 வழிச் சாலையில் பொது மக்கள் மறியல்..

IMG 20221130 WA0030 - 2026


விருதுநகர் 4 வழிச் சாலை அருகே சேவைச் சாலை அமைத்துதரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையோரத்தில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, வடமலைக்குறிச்சி சாலை சந்திப்பு, பாவாலி விலக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், வடமலைக் குறிச்சி விலக்கிலிருந்து பாவாலி விலக்கு வரை சேவைச் சாலை இல்லை.

மேலும், சாலையின் ஓரத்தில் உள்ள மண் சாலையை சேவைச் சாலையாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மண் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் 4 வழிச் சாலையின் எதிர் திசையில் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில், காவல்துறையினர் அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை வசூலித்துள்ளனர். எனவே, இதனைக் கண்டித்து பொது மக்கள் ஒன்று திரண்டு 4 வழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். உடனடியாக சேவைச் சாலை அமைக்க வேண்டும் எனவும், சாலை அமைக்காமல் அபராதத் தொகை வசூலிக்க கூடாது எனவும் கோஷமிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொது மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சேவைச் சாலை அமைத்திட அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தீ.ஒ.மு பலமுறை புகார் : ஏற்கனவே, வடமலைக்குறிச்சி விலக்கு முதல் பாவாலி விலக்கு வரை சேவைச் சாலை அமைக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.முத்துக்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அக்கடிதத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories