
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று மீட்டுள்ளனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின், நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகியவற்றை டார்ன் தரன் போலீசார் மீட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கௌரவ் யாதவ் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 28 அன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலிருந்து சுமார் 10 கிலோ ஹெராயினை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.