ஆளில்லா விமானத்தில் பறந்து வந்த ஹெராயின்..

Published:

drone105633 - 2026


பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று மீட்டுள்ளனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின், நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகியவற்றை டார்ன் தரன் போலீசார் மீட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கௌரவ் யாதவ் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் 28 அன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலிருந்து சுமார் 10 கிலோ ஹெராயினை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img