சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் பிற்பகலில் வெகுவாக குறைந்து..

FB IMG 1670146997621 - 2026
FB IMG 1670147005273 - 2026

சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது.பிற்பகலில் வெகுவாக குறைந்து காணப்பட்டது.சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம் காத்திருப்பு சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 5 மடங்கு உயர்வு இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை 27-ந்தேதி நடக்கிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் கடந்த 2-ந் தேதி வரை கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 18-ம் படி ஏறவும், நெய்யபிஷேகம் செய்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் கோவிலின் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.அப்பம் மற்றும் அரவணை விற்பனை, சிறப்பு வழிபாடு கட்டணங்கள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்து இப்போது 20 நாட்கள் ஆகிவிட்டது.

இதில் முதல் 10 நாளில் மட்டும் கோவில் வருவாய் ரூ.52.55 கோடியாக இருந்தது. இப்போது இந்த வருவாய் இன்னும் அதிகரித்து இருக்கும். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்னும் வெளியிட வில்லை. கடந்த ஆண்டு கோவில் வருவாய் முதல் 10 நாளில் ரூ.9.92 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கோவில் வருவாய் 5 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நிலக்கல், பம்பையில் அரசு பஸ்களில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கூடுதல் பஸ்களை இயக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் நாளை அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FB IMG 1670146914160 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories