புதுதில்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்தை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளது. ஹிட்லருக்கு இருந்த அரசு மிகவும் பலமான அரசு. ஆனால், ஹிட்லர் ஜெர்மனியை எவ்வளவு தூரம் அழிவுப்பாதையில் கொண்டு சென்றார்…. -என்று கருத்து தெரிவித்திருந்தார் ரகுராம் ராஜன். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன், நமது நாட்டில் மிக வலுவான அமைப்பு ரீதியான அடித்தளங்கள் உண்டு. நீதித்துறை, எதிர்க்கட்சி, ஊடகம், என்.ஜி.ஓ., ஆனால், அரசும் செயல்படுத்தும் விதமும் இன்னும் வலுவாக வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆளும்போது, அரசு நிர்வாகம் மிகச் சரியாக இருந்தது. ரயில்கள் குறித்த நேரத்தில் வந்தன. நமது நாட்டில் 1975-77 நெருக்கடி நிலையின் போதான சூழல் போல்! அவரது அரசு வலுவானதுதான்…ஆனால், அவர் எடுத்துச் சென்ற விதம்… ரயில்கள் நேரத்துக்கு ஓடுவது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல, ஆனால் அவை சரியான திசையில், இலக்கினை நோக்கிய திசையில் சரியாகச் செல்ல வேண்டும்… என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன். காங்கிரஸ் கட்சி அவரது பேச்சில் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, மோடியை கிண்டல் அடிப்பதாக இன்று டிவிட்டரில் கருத்தைப் பதிவு செய்துள்ளது. ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த எமர்ஜென்சியையும் குறிப்பிட்டுப் பேசியிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற வலுவான தலைவர் ஹிட்லர்: காங்கிரஸ் டிவிட்!
Popular Categories


