சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்த அரசின் செயலுக்கு பாராட்டி, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆரோக்கியதாஸ் வெளியிட்ட அறிக்கையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராக இருந்து வரும் முனைவர் மு.முத்துவேலு என்பாரின் அயல்பணிக்காலம் இரண்டுஆண்டுகள் மட்டுமே ஆனால் தமிழக அரசையும், மத்திய அரசையும் ஏமாற்றி இன்றுவரை பணியில் தொடர்ந்துவருகிறார்.அவரால் பாலியல் மற்றும் சாதிய வன்முறைக்கு ஆளான நிறுவன பெண்பணியாளர் அவர்மீது வழக்குத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் நீதி கேட்டு சட்டரீதியாக போராடிவருகிறார். இது தொடர்பாக ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே பதிவாளரைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சமுதாயத்திற்கும் நீதிகிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை மடல் பலமுறை அனுப்பியும் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டதுறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் மனு அளித்தது . கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட செம்மொழி நிறுவன பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 07.08.2014 ஆம் நாள் காவல்துறை மானியக் கோரிக்கையின் விவாதத்தில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை, பதிவாளர் மு.முத்துவேலு அவர்களை மீண்டும் அவரது தாய்துறைகே திரும்ப சேருமாறு அறிவுறுத்தியது. இதனை அறித்த பதிவாளர் முத்துவேலு செம்மொழி நிறுவன பொறுப்பு இயக்குநர் பூமா-வுடன் கலந்து பேசி அவர் மூலமாக மேலும் 1 ஆண்டு பணிநீட்டிப்பு வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கல்லூரிக் கல்வி இயக்ககம் அதனை மறுத்து அவரை உடனே கல்லூரியில் சேர்ந்து விட்டு அக் கல்லூரியின் ஒப்புதல் ஆணையை தருமாறு கடுமையாக அறிவுறுத்தி மீண்டும் ஆணையிட்டது. இதனை அறிந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் செம்மொழி நிறுவன வளாகத்திலேயே மக்களின் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துப்பலகை வைத்துள்ளனர். – என்று கூறப்பட்டுள்ளது.
செம்மொழி நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்ததற்கு செம்மொழி ஊழியர்கள் சங்கம் பாராட்டு
Popular Categories


