December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் !

drug addiction - 2025
கோப்பு படம்

சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புள்ள கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன் மற்றும் கஞ்சா ஆயில் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர்.

இதில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூர் பாக்யராஜ் 39, தனசேகர் 32, கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.பல கோடி மதிப்பில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி, மதுரை, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறையினர் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சுங்க சாவடி அருகே சென்ற காரை மடக்கி சோதனையிட்டனர். அதிலிருந்த இருவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். காரை சோதனையிட்ட போது 38 கிலோ கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன், 50 கிலோ கஞ்சா ஆயில் இருந்தது. காருடன் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

நிபுணர்கள் பரிசோதித்ததில் கடத்தியது மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு ஓய்வுக்கு சென்றுள்ளதை தினந்தோறும் உணரமுடிகிறது. கஞ்சா பழக்கம் பரவியுள்ளதும், நாள் தோறும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதுமே இதற்கு சான்றாகும். கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள், சிறை மரணம் என திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது என்று பாஜக.,வினர் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories