February 21, 2026, 7:48 PM
29 C
Chennai

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் !

drug addiction - 2026
கோப்பு படம்

சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புள்ள கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன் மற்றும் கஞ்சா ஆயில் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர்.

இதில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூர் பாக்யராஜ் 39, தனசேகர் 32, கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.பல கோடி மதிப்பில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி, மதுரை, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறையினர் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சுங்க சாவடி அருகே சென்ற காரை மடக்கி சோதனையிட்டனர். அதிலிருந்த இருவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். காரை சோதனையிட்ட போது 38 கிலோ கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன், 50 கிலோ கஞ்சா ஆயில் இருந்தது. காருடன் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

நிபுணர்கள் பரிசோதித்ததில் கடத்தியது மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு ஓய்வுக்கு சென்றுள்ளதை தினந்தோறும் உணரமுடிகிறது. கஞ்சா பழக்கம் பரவியுள்ளதும், நாள் தோறும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதுமே இதற்கு சான்றாகும். கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள், சிறை மரணம் என திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது என்று பாஜக.,வினர் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories