இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் !

drug addiction - 2026
கோப்பு படம்

சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புள்ள கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன் மற்றும் கஞ்சா ஆயில் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் காருடன் பறிமுதல் செய்தனர்.

இதில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூர் பாக்யராஜ் 39, தனசேகர் 32, கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.பல கோடி மதிப்பில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி, மதுரை, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறையினர் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சுங்க சாவடி அருகே சென்ற காரை மடக்கி சோதனையிட்டனர். அதிலிருந்த இருவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். காரை சோதனையிட்ட போது 38 கிலோ கிறிஸ்டல் மெத்தாபேட்டமைன், 50 கிலோ கஞ்சா ஆயில் இருந்தது. காருடன் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

நிபுணர்கள் பரிசோதித்ததில் கடத்தியது மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு ஓய்வுக்கு சென்றுள்ளதை தினந்தோறும் உணரமுடிகிறது. கஞ்சா பழக்கம் பரவியுள்ளதும், நாள் தோறும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதுமே இதற்கு சான்றாகும். கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள், சிறை மரணம் என திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது என்று பாஜக.,வினர் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories