சிதம்பரம், கார்த்திக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை இல்லை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

E_V_K_S__Elangovanசென்னை: மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கோ, கார்த்திக்கோ நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர்கள் பெரிய நபர்கள் இல்லை, அதற்காக காங்கிரஸ் மேலிடத்திடம் பேச வேண்ண்டியதும் இல்லை என்று கூறினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இளங்கோவன் நேற்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… கோவை காங்கிரஸ் பிரமுகர்களும் சிதம்பரம் ஆதரவாளர்களுமான 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட விவகாரத்தில், சிதம்பரம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட கடிதம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை. அவர்கள் ஒன்றும் பெரிய நபர்கள் கிடையாது. இதுபற்றி காங்கிரஸ் தலைமையிடம் பேச வேண்டியதும் இல்லை. நான் இப்போது, சோனியா காந்தி, கட்சி பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். அதுபற்றி உங்களிடம் சொல்வதற்கு இல்லை. கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றார். மேலும், மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்து பல ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், திருடப்பட்டு உள்ளதாகவும், அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வருகின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இதுபோல மத்திய அரசு ஆவணங்கள் மாயமாகிவிட்டன. அப்போது ஆவணங்கள் திருட்டு போனதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் கோரினர். தற்போது மத்திய அரசு ஆவணங்கள் திருட்டு போய் இருப்பதால் முன்மாதிரியாக பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி, விலகுவாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

Topics

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Entertainment News

Popular Categories